சீன கடலட்டை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கெதிராக  வடக்கு மீனவ சமூகங்கள் அண்மைக்காலங்களில்  போராடி வருகின்றன. இதற்கான  காரணமென்னவெனில் கடலட்டைகளை  அறுவடை செய்ய ஏக்கர் கணக்கில் கடல் நிலத்தை அந்நிறுவனம்  கையகப்படுத்தியுள்ளது, 

இது உள்ளூர் மீனவர்கள் தமது தொழிலில் ஈடுபடுவதற்கான இடத்தை மேலும் கட்டுப்படுத்துவதாக அமைகிறது.

அதன் கடலட்டை வளர்ப்பின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சீன கூட்டு முயற்சியானது, பூநகரி பிரதேச செயலகத்தில் உள்ள வடக்கு கடற்கரை கிராமமான கெளதாரிமுனையில் ஒரு கடலட்டை குஞ்சுகளை வளர்க்கும் பண்னையை அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இது  தொடர்பாக  பாசையூர் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் பி.மாதன் கூறுகையில்  குறைந்த அளவிலான வசதிகள் மற்றும் மூலதனத்துடன் உள்ளூர் மீனவர்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும்போது, இந்த சீனக்கூட்டு நிறுவனத்தின் வருகையானது உள்ளூர் வணிகங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தலாக அமையும் என்று கூறினார்.

“சீன கூட்டு முயற்சியுடன் ஒப்பிடும்போது, எங்கள் முதலீடுகள் ஒன்றுமில்லை. வணிகத்தில் மிதக்க நாங்கள் போராடும் போது நிறுவனம் அதிநவீன வலைகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துகிறது, ”என்று திரு மதன் கூறினார், உள்ளூர் பண்ணைகளுக்கு கடலட்டை குஞ்சுகளை  வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஆரம்பத்தில் நிறுவப்பட்டது.